Posts

Showing posts from September, 2022

திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி முடித்த சுந்தரபாண்டியன்-1.

Image
திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி முடித்த சுந்தரபாண்டியன்-1.  முதலாம் சுந்தரபாண்டியன் திருவரங்கம் கோவிலில் பல கைங்கர்யங்களை செய்துள்ளனர்.  திருவரங்கம் கோயிலின் துலாபுருஷ மண்டபங்களும், சரஸ்வதி பண்டார நூலகமும் – “சுந்தரபாண்டியம் பிடித்தேன்” என்ற அருளப்பாடு திருவாராதனத்தில் வர காரணம்-திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் நடக்கும் மார்கழி திருவாய்மொழி திருநாள் (இராப்பத்து) முழுவதும் நம்பெருமாள் இங்கு எழுந்தருள்வார். இந்த ஆயிரங்கால் மண்டபத்தை கட்ட ஆரம்பித்தது ஹொய்சால அரசரின் தளபதி பெருமாள் தேவன். ஆனால் இதனை கட்டி முடித்தது சுந்தரபாண்டியன். இந்த மண்டபத்தின் பெயர் பெருமாள் தேவன் மண்டபம். (கட்டி முடித்த சுந்தர பாண்டியன் தான் பெயரை வைக்காமல் முதலில் கட்ட ஆரம்பித்த பெருமாள் தேவன் பெயரயே சூட்டினான்).  ஆயிரங்கால் மண்டபத்தில் பின்பகுதி தூண்களுக்கும் முன்பகுதி தூண்களுக்கும் வித்தியாசங்களை காணலாம் ஆயிரங்கால் மண்டபத்தில் மொத்தம் 979 தூண்கள் தான் உள்ளன. அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மண்டபத்தின் முன்புறம் 21 தென்னை மரங்கள் நடப்படும். இந்த 2...

பாட்டிலை உலுக்கியது யார்?

Image
20 கறுப்பு எறும்புகளையும், 20 சிவப்பு எறும்புகளையும் சேகரித்து அதனை ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். அவைகளுக்கு ஒன்றும் ஆகாது. சண்டை போடாது. ஏதாவது உணவுத் துகள் கிடைக்கிறதா? என்று தேடிக்கொண்டிருக்கும்.  அந்த பாட்டிலை  எடுத்து மூன்று முறை பலமாக குலுக்கி  மீண்டும் மேஜையில் வைத்து விடுங்கள். இப்பொழுது எறும்புகள் ஒன்றை ஒன்று தாக்க ஆரம்பிக்கும். கறுப்பு எறும்புகள் சிவப்பு ஏறும்புகள் தான் தங்களை தாக்கின என நினைத்து சிவப்பு ஏறும்புகளை தாக்கத் தொடங்கும். சிவப்பு எறும்புகள் கறுப்பு எறும்புகள் தான் தங்களை தாக்கின என நினைத்து  கறுப்பு எறும்புகளை தாக்கத் தொடங்கும். கறுப்பு எறும்பு சிகப்பு ஏறும்பை எதிரியாக நினைக்கிறது. ஆனால் யார் உண்மையான எதிரி?. பாட்டிலை குலுக்கியவர் தான்.  இது போன்ற சண்டைகள் தினந்தோறும்  நமது சமூகத்திலும் நடந்து கொண்டே இருக்கிறது. கணவன் -மனைவி இடதுசாரி - வலதுசாரி பணக்காரர் - ஏழை நம்பிக்கை - அறிவியல் என சமூகத்தில் மோதல்களுக்கான காரணம் தெரியாமல் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.  நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்கு முன், ...